Wednesday, August 6

தமிழ்நாடு

பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை பொய்யாவயல் உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 9-ஆம் வகுப்பில் படித்து வந்த சக்தி சோமையா (14) இன்று வகுப்பறையில் கம்ப்யூட்டர் இயக்கும் போது,இணைப்பு வயரை பிளக்கில் மாட்டியபோது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.அவர் அசுத்தமாகக் கீழே விழுந்ததை பார்த்த ஆசிரியர்கள் உடனே காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுப்பினர்கள். பரிசோதனைக்கு பிறகு, மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக கூறியதால், சாக்கோட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகின்றது. உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளதால் பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவு...
புல்லட் ராஜா யானை முத்துக்குளி வயலுக்கு விடப்பட்டது

புல்லட் ராஜா யானை முத்துக்குளி வயலுக்கு விடப்பட்டது

தமிழ்நாடு
கூடலூர் வனக்கோட்டத்தில் வீடுகளை இடித்து வந்த புல்லட் ராஜா என்ற ஆண் காட்டு யானையை 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டது. அங்கு யானைக்கு தேவையான இலைதழைகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு, கமாண்டுகள் வழங்கப்படவில்லை. கால்நடை மருத்துவ குழுவும் யானையை கண்காணித்தது.25 நாட்களுக்குப் பிறகு, புல்லட் ராஜா யானையை முத்துக்குளி வயல் பகுதியில் உள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு மாற்றி அனுப்புவதற்கான உத்தரவு வன உயிரின காப்பாளர் வழங்கினார். இன்று அந்த யானையை முத்துக்குளி வயலுக்கு கொண்டு சென்று, அங்கு விடப்பட்டது. இதற்கு முன்பு, அரிகொம்பன் என்ற மற்றொரு யானையும் தேனி பகுதியில் பிடிக்கப்பட்டு, முத்துக்குளி வயலுக்கு விடப்பட்டது. இப்போது, அந்தப் பகுதியிலுள்ள புற்கள் மற்றும் தண்ணீருடன் சேர்ந்திருந்து, அங்கு உள்ள யானைகளுடன் பயணித்து வருகிறான். காட்டை ...
176வது திருவள்ளுவர் உருவச்சிலை திறப்பு விழா…

176வது திருவள்ளுவர் உருவச்சிலை திறப்பு விழா…

கோவை
176 வது திருவள்ளுவர் திருவுருவச்சிலை VGP குழுமத்தின் தலைவர் டாக்டர் V.G. சந்தோஷம் திறந்து வைத்தார். குனியமுத்தூர் சரஸ்வதி இராமச்சந்திரன் வித்யாலயா மெட மேல்நிலைப்பள்ளியில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை திறப்புவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றதுஉலகப்பொதுமறையான திருக்குறள இயற்றிய தெய்வப்புலவர் திருவள்சுவரின் திருவுருவச் சிலை எங்களது பள்ளியில் நிறுவப்பட்டு, சிலை திறப்புவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாயின் சிறப்பு விருந்தினராக VGP உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமையர், செவாலியர், கலைமாமணி விருதுகளை பெற்ற VGP குழுமத்தின் தலைவர் டாக்டர் V.G. சந்தோஷம் அவர்கள் பங்கேற்றுத் தெய்வரிபுலவரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றினார். விழாவில் பள்ளியின் தாளாளர் திரு. அந்தானகோபால் அவர்களும் பள்ளியின் அறங்காவலர்கள் திரு.ரவீந்திரஅறங்காவலகள் மற்றும் திரு. சுதர்ஷன் அவர்கள் சிறப்பித்தன...
கோவையில் 128-வது நேதாஜி பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவையில் 128-வது நேதாஜி பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் கொடியேற்றி மற்றும்இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில்  கோவை மாவட்டம் செயளாலர் V.P.S சௌந்தரபாண்டி தலைமையில் மற்றும் தமிழ் நாடு விவசாய கட்சியின் மண்டல தலைவர் குரூஸ் முத்து பிரின்ஸ் முன்னிலையில் கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதி விரிவாக்கம் பகுதியில் ஃபார்வேர்ட் பிளாக் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில்  பார்வேர்ட் பிளாக் கட்சியின் துணை செயலாளர் நேதாஜி ரமேஷ் கண்ணன் , பீளமேடு பகுதி செயளாலர் ஹரீஸ், மேகன்,சாம், சரவணன்,ஜோசப் பெலிக்ஸ், குட்டி மோகன், தினகர் ,அலெ...
காட்டு யானை தாக்கிய விபத்தில் 3 பேர் உயிர்தப்பினர்

காட்டு யானை தாக்கிய விபத்தில் 3 பேர் உயிர்தப்பினர்

பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்வன பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை சுற்றி வந்தது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவ்வழியில் செல்லும் போது யானையின் நடமாட்டத்தை கவனமாகப் பார்ப்பதற்கு வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், இன்று மதியம் நவமலை பகுதியில் மின்வாரிய இளநிலை பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் அவரது இரண்டு பணியாளர்கள், அப்பர் ஆழியார் செல்லும் போது எதிர் திசையில் அதிவேகமாக வந்த யானை பொலிரோ கார் மீது தாக்கியது. அதன் விளைவாக, கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பயணம் செய்த மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதனால் அந்தப் பகுதியிலுள்ள சூழல் பரபரப்பாகி உள்ளது.  ...
நேதாஜி:128வது பிறந்த நாள் விழா

நேதாஜி:128வது பிறந்த நாள் விழா

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு சுதந்திரப்போராட்ட வீரரின் நினைவாக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.பெருநகர பேருந்து நிலையம் முன்பு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, பொதுமக்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கினார்.பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் ஆர். வெள்ளை நடராஜ் தலைமை தாங்கி, பேரவை செயலாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார். தொடர்ந்து, பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி முன்னாள் முதல்வர் ரெ. முத்துக்குமரன் மற்றும் தற்போது உள்ள முதல்வர் மாணிக்க செழியன் மாணவ மாணவிகள் இட...
பாஜக நிர்வாகி நியமனத்தில் பரபரப்பு: பொள்ளாச்சியில் எதிர்ப்பு போஸ்டர்கள்

பாஜக நிர்வாகி நியமனத்தில் பரபரப்பு: பொள்ளாச்சியில் எதிர்ப்பு போஸ்டர்கள்

பொள்ளாச்சி
பாஜக கோவை தெற்கு மாவட்ட புதிய தலைவர் நியமனத்தை பாஜக நிர்வாகிகள் பலரும் எதிர்த்து, பொள்ளாச்சி மற்றும் பல பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.கோவை தெற்கு மாவட்டத்தில், பழைய தலைவர் வசந்த ராஜன் கட்சி விதிகளுக்கு அமைய மூன்று ஆண்டுகள் செயல்பட்ட பிறகு, புதிய தலைவராக சந்திரகுமார் நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு முன்னதாக பாஜக நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றிய சந்திரகுமார், ரூ.10 லட்சம் ஏமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.இதனால், பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி உருவாகி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.பாஜக மூத்த நிர்வாகி எம்.ஏ.என். நடராஜன் கூறுகையில், “அண்ணாமலைவின் தலைமையில் கட்சி பெரிதும் வளர...

இழுப்பக்குடி 100 நாள் வேலை நிறுத்தம்: மறியல் போராட்டம்…

தமிழ்நாடு
காரைக்குடி அருகே உள்ள இழுப்பக்குடி கிராமத்தில் 100 நாள் வேலைக்கு வந்த பொதுமக்களை சாக்கோட்டை யூனியன் அதிகாரிகள் வேலை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து ஆத்திரமடைந்த கிராம மக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காரைக்குடி-அரியக்குடி-உஞ்சனை-மாத்தூர்-தேவகோட்டை செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் காரணமாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் சென்று, பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இழுப்பக்குடி கிராமம் தற்போது காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்டதன் காரணமாகவே வேலை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ...
GRG கிருஷ்ணம்மாள் கல்லூரி நிறுவனர் நாள் விழா…

GRG கிருஷ்ணம்மாள் கல்லூரி நிறுவனர் நாள் விழா…

திருச்சி
கோவை:ஜி.ஆர்.ஜி. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கல்லூரி அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் ஏற்பாட்டை ஜி.ஆர்.ஜி. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் G. ரங்கசாமி மற்றும் பி.எஸ்.ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி முன்னெடுத்தனர். காவலரான அன்னபூர்ணா உணவகங்களின் தலைவர் D. சீனிவாசன் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அதன் பிறகு, சந்திரகாந்தி அம்மையார் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் சாந்தி துரைசாமி, கடின உழைப்பும் நம்பிக்கையும் உயர்வை அளிக்கும் என கூறி விருதைப் பெற்றார். இதேபோல், கங்கா மருத்துவமனை தலைவர் மருத்துவர் S. ராஜசேகரும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். அவர், மாணவிகளுக்கு தொழில்நுட்ப உலகில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டு முன்னேற்றம...
திருச்சியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி
திருச்சி:திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தமிழ்நாட்டின் பேருந்து சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய இன்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டார். இந்த கட்டுமானப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசித்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக மேலாண்மை இயக்குநர் சு.சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் திரு.வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.  ...