Sunday, July 27

கோவை

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்!

கோவை
கோவை சோமையனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினார். WhatsApp Image at PM () சோமையனூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது வருகின்றது. இப்பள்ளியில், இன்று நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் ட்ரஸ்ட், மற்றும் என்டிடிவி டாடா அமைப்பின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதிய கழிப்பறைகள், உயர் கல்வி பெற மாணவ மாணவியர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மற்றும் மலைவாழ் மக்களின் தேவைகளுக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிக...
நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம்: முன்னாள் ராணுவ மேஜர் கருத்து!

நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம்: முன்னாள் ராணுவ மேஜர் கருத்து!

கோவை
உலக நாடுகள் வரிசையில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது.இந்தியா நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம் இருக்கிறது.கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் உரையாற்றிய இந்திய இராணுவத்தி்ல் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் இந்திரபாலன், இளம் தலைமுறை மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊக்குவிப்பதி்ல் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் கடமை இருப்பதாக கூறியுள்ளார். பள்ளி மாணவர்கள், ஜெய்ஹிந்த முழக்கமிட்டு இந்திய இராணுவத்திற்கு மரியாதை செய்தனர். கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள (தனியார்) கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியில் 15"வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா கேம்ஃபோர்டியன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய இராணுவத்தி்ல் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் இந்திரபா...
கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் சர்வதேச அங்கீகாரம்…

கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் சர்வதேச அங்கீகாரம்…

கோவை
கோவை நீலாம்பூர் பகுதியில் இயங்கி வரும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அண்மையில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த விளங்கும் மருத்துவ மையமாக USA சர்ஜிகல் ரிவ்யூ கார்ப்பரேஷனின் எஸ் ஆர். சி. அங்கீகாரத்தை பெற்றது. அதனைத்தொடர்ந்து ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க.மாதேஸ்வரன் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து ராயல் கேர் மருத்துவமனை தலைவர் கா மாதேஸ்வரன் கூறுகையில் ராயல் கேர் மருத்துவமனை அனைத்து நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சையை மேம்படுத்துவதற்கும், தரமான சிகிச்சையை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க. மாதேஸ்வரன் கூறினார். மேலும், அவர் கூறுகையில், "ராயல் கேர் மருத்துவமனைக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நரம்பியல் அறுவை சிகிச்சையில் துறையில் மிகச் சிறந்த மற...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களப்பணியாளர்களுடன் கொண்டாட்டம்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களப்பணியாளர்களுடன் கொண்டாட்டம்…

கோவை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை வடக்கு மாவட்டம் செல்வபுரம் பகுதி கழகம் சார்பில், கோவை மாநகராட்சி 76, 77, 78 மற்றும் 79 வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் புத்தாடை, இனிப்புகளை வழங்கும் விழா செல்வபுரம் சமுதாய கூடத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ. ரவி களப்பணியாளர்களுக்கு உணவும், புத்தாடையும், இனிப்பும் வழங்கினார். விழாவுக்கு ஏற்பாடு செய்த செல்வபுரம் பகுதி திமுக செயலாளர் கேபிள் மணி, துணை மேயர் வெற்றி செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ராஜ்குமார், வசந்தாமணி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் அறிவழகன், ராஜேஷ், இப்றாகீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.களப்பணியாளர்களுக்கான உற்சாக நிகழ்வுதூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல துறை ஊழ...
பிஎஸ்ஜி மாணவர் இல்லத்தில் மாணவர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…

பிஎஸ்ஜி மாணவர் இல்லத்தில் மாணவர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…

கோவை
கோவையில் பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக பி.எஸ்.ஜி. மாணவர் இல்லம் செயல் பட்டு வருகின்றது. சமூக மற்றும் பொருளாதாரப் ஏற்றத்தாழ்வுகளை போக்க பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வரும் இந்த இல்லத்தில் ஆதரவற்ற  மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பி.எஸ்.ஜி.அறக்கட்டளை  நிர்வாகிகள் மாணவர்களுடன் இணைந்து  கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில், முன்னதாக  மாணவர்களுக்கு புத்தாடைகள், , இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.. பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்ற ,இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்ததோடு தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இது கு...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

கோவை
கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயர், வயது உள்ளிட்ட திருத்தங்களை செய்ய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இத்துடன் தொடர்புடைய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (29.10.2024) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் அவர்களால் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பொள்ளாச்சியின் சார்ஆட்சியர் கேத்தரின் சரண்யா பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மொத்த மாவட்ட வாக்காளர்கள்: ஆண்கள்: 15,43,073 பெண்கள்: 16,05,516 மூன்றாம் பாலினத்தவர்: 650 மொத்தம்: 31,49,239 சட்டமன்ற தொகுதிவாரியான விவரம்: 1. மேட்டுப்பாளையம் (தொகுதி 111): ஆண்கள்:...
ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா

ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா

கோவை
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தில், ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது. ராம்ராஜ் காட்டனின் வேட்டி, சர்ட்டுகள், பனி யன்கள் உள்ளிட்டவை, அதன் ஷோரூம்களில் மட் டுமின்றி, முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் கிடைக் கின்றன. இந்நிலையில், கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில், ஷோரூம் டி.வி. எதிரில், புதிய ஷோரூம் திறப்பு விழா, நேற்று நடந்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வரவேற்றார். ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி தலைவர்தங்க வேலு, ஷோரூமை திறந்து வைத்தார். செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் நந்தகு மார், முதல் விற்பனையை துவக்கி வைக்க, டேனி ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் சிவ ராமன் கந்தசாமி பெற்றுக் கொண்டார். இணை நிர் வாக இயக்குனர் அஸ்வின் உட்பட பலர் பங்கேற்றவின்...
சூழலியல் முக்கியதுவத்தை வலியுறுத்தி நீர்நிலைகளில் பசுமை தீபாவளி ஓவியப் போட்டி…

சூழலியல் முக்கியதுவத்தை வலியுறுத்தி நீர்நிலைகளில் பசுமை தீபாவளி ஓவியப் போட்டி…

கோவை
கோவையை சேர்ந்த கெளசிகா நீர்கரங்கள் கூட்டமைப்பு சார்பாக கோவையை சுற்றி பல நீர்நிலைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் கோவை வடக்கு பகுதியின் வாழ்வாதாரமான சின்னவேடம்பட்டி ஏரி சீரமைப்பு பணிகள் மற்றும் தொடர் பராமரிப்பு பணிகள் உட்பட பசுமை பணிகள் மற்றும் குழந்தைகள் பெரியவர்களுக்காக பறவைகள் நடைகானல், திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் போன்ற பணிகள் கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் 342 வது வார களப்பணி தினத்தில் இன்று சிறுவர் சிறுமியர்களுக்கும் பசுமை சூழலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை கணபதி கே2 ஸ்டூடியோ உடன் இணைந்து பசுமை தீபாவளி என்ற தலைப்பில் ஓவிய போட்டி சின்னவேடம்பட்டி ஏரிப்பகுதியில் நடைபெற்றது. குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் நிகழ்வில் இணைந்தனர். இதில் பல சிறுவர்கள் சிறுமியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவரு...
கோவை மாநகர முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்…

கோவை மாநகர முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்…

கோவை
புகைப்பிடிப்பதால் மட்டும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதில்லை, சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை நுரையீரல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், கோவை மாநகர முன் கள பணியாளர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் புரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. முகாமில் மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் இலவச நுரையீரல் பரிசோதனையில் பங்கேற்றனர். இதன் மூலம் நுரையீரல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று, முன் கள பணியாளர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்பட்டது.மருத்துவர்களின் கருத்து:சுற்றுச்சூழல் மாசு கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகரித்து, புகைப்பிடிப்பதுடன் இணைந்து நுரையீரல் பாதிப்பை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங...
பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம்…

பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம்…

கோவை
பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ‘அருளகம்’ இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளி மாநிலங்களிலிருந்து பாறு கழுகு தொடர்பான ஆராய்ச்சியிலும் களப்பணியிலும் அருளகத்துடன் இணைந்து செயல்படும் கூட்டு அமைப்புகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை அருளகத்தின் தலைவர் கார்த்திகா ராஜ்குமார் வரவேற்றார். அருளகத்தின் செயலர் பாரதிதாசன் நோக்க உரையாற்றினார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அருளகம் சார்பாக ‘தமிழ்நாடு பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்திட்டம்- வரைவு அறிக்கை’ வெளியிடப்பட்டது. இதனை ஓய்வு பெற்ற வனத் துறை அலுவலர் பத்ரசாமி வெளியிட ‘ஓசை’ அமைப்பின் தலைவர் காளிதாசன் பெற்றுக்கொண்டார். பாறு கழுகுகள் பாதுகாப்புக்கென தேசிய அளவிலும் மாநில, மாவட்ட, மற்றும் பஞ்சாயத்து அளவிலும் எடு...