கோவா தபோலிம் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், பறவை மோதலால் இன்று (ஆகஸ்ட் 14) காலை 6.45 மணிக்கு ரத்து செய்யப்பட்டது. பறவை மோதியதைக் கண்டதும், விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….
காங்கிரஸ் கட்சி, அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடு குறித்த புகாரை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்றும், செபி (SEBI) தலைவா் மாதபி புரி புச்சை பதவி விலகக் கோரியும், ஆகஸ்ட் 22-ஆம் தேதி நாடு தழுவிய…
கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு முதுநிலை மருத்துவ மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்…
ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், ஹரியாணா மாநில பள்ளிகளில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநில பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்கள் ஆசிரியர்களைக் கண்டதும் “குட் மார்னிங்” அல்லது “குட்…
இந்தியாவில் அரிசி வழங்கும் ஏடிஎம் (Automated Teller Machine) ஒன்று முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. இது ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் உள்ள மஞ்சேஸ்வரில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இந்த புதிய இயந்திரம், 24 மணி நேரம் அரிசியை வழங்கும் திறனுடன் இருக்கும், இது குடும்ப…
பாரபட்சத்துடன் மத்திய பட்ஜெட் இருப்பதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம். எல்லா மாநிலங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது;மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து 2.50 லட்சம் பேர் தங்களது எண்களை BSNL-க்கு மாற்றியுள்ளனர். மேலும் 25 லட்சம் பேர் புதிதாக BSNL சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். மற்ற நிறுவனங்களின் ஆரம்ப கட்டணமே ₹199-ஆக…
ஹூஸ்டனில் உள்ள 40 வயதான ஆசிய யானை டெஸ், யானையின் எண்டோத்தீலியோட்ரோபிக் ஹெர்பீஸ் வைரஸுக்கான முதல் mRNA தடுப்பூசியை போடப்பட்டுள்ளது. • இத்தடுப்பூசி இளம் யானைகளை இந்த வைரசிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது, இந்த வைரஸ் யானைகளின் மரணங்களுக்கு முக்கிய காரணமாக…
• இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI) விஞ்ஞானிகள், கேரளாவில் உள்ள சக்திகுளங்கரா மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து Squalus hima என்ற புதிய வகை ஆழ்கடல் நாய்மீன் சுறாவைக் கண்டுபிடித்துள்ளனர். • ஸ்குவாலஸ் இனத்தைச் சேர்ந்த சுறாக்கள் அவற்றின் கல்லீரல் எண்ணெயுக்காகப்…
கேரளத்தின் புகழ்பெற்ற கலாமண்டலத்தில் முதன்முறையாக அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. கலாமண்டலத்தில் தினசரி சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறி, மாணவர்கள் அசைவ உணவு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற கலாமண்டல நிர்வாகம், கலாமண்டலத்தின் வரலாற்றில் முதன்முறையாக கடந்த புதன்கிழமையில்…