Wednesday, February 5

தமிழகத்தை நோக்கி புயல் சின்னம்… மழைக்கு வாய்ப்பு

ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்த புயல் சின்னம் மீண்டும் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாக, தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்த புயல் சின்னம் மீண்டும் தமிழகத்தை நோக்கி திரும்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 25 இரவு முதல் டிசம்பர் 26 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை அதிக பாதிப்பு இல்லாத மிதமான மழையாக இருக்கும்.

இன்று (டிசம்பர் 23) உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

இத்தகைய வானிலை மாற்றம் குறித்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க  பொள்ளாச்சி அருகே  அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 6 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *