Wednesday, February 5

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் உண்டியலில் கிடைத்த ஐபோன்: உரிமையாளர் கோரிக்கையை நிர்வாகம் மறுத்தது…

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள பிரசித்திபெற்ற கந்தசாமி கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் விலைமதிப்புள்ள ஐபோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உரிமையாளர் அதனை திரும்ப பெற முயன்ற போதும், கோயில் நிர்வாகம் அதனை “முருகனுக்கு சொந்தமான காணிக்கை” என்று தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி மற்றும் செயல் அலுவலர் குமரவேல் தலைமையில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில்,

மொத்தம் ரூ.52 லட்சம் ரொக்கம்,

289 கிராம் தங்கம்,

6920 கிராம் வெள்ளி,

தாலி, கண்மலர், வேல் போன்ற பொருட்களுடன் ஐபோனும் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட ஐபோன் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டது. தினேஷ், அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தபோது, பணம் போடும் போது செல்போன் தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்டதாக தெரிவித்தார்.

உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தமானதாக நிர்வாகம் தெரிவித்தது. தினேஷின் தகவல்களை மாற்றிக் கொள்ளும்படி கூறிய அவர்கள், செல்போனை திருப்பி அளிக்க முடியாது என உறுதியுடன் மறுத்தனர்.

தினேஷ், சென்னை இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் சேகர் பாபு, “கோயிலின் உண்டியல் பெட்டியில் விழும் எந்த பொருளும் தெய்வத்தின் காணிக்கையாகவே கருதப்படும். இதற்கான சட்ட விதிவிலக்குகள் உள்ளதா என்பதை ஆராய்வோம்,” என்று தெரிவித்தார்.

கோயிலின் உண்டியலில் விலையுயர்ந்த பொருள் கிடைத்ததும், அதனை திரும்பப் பெற உரிமையாளர் முயற்சித்ததும், இது கோவிலின் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் சட்ட அடிப்படையில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க  த.வெ.க. மாநில மாநாடு 17 நிபந்தனைகளுடன் அனுமதி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *