தொழில்நுட்ப நிறுவனமான ஜியோமி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொபைல் போன் உதிரிபாகங்களில் குறைந்தது 55 சதவிகிதத்தை உள்நாட்டிலிருந்தே தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜியோமி, தனது மின்சார சொகுசு காரை காட்சிப்படுத்தியுள்ளது.
ஜியோமியின் இந்திய தலைவர் பி. முரளிகிருஷ்ணன், செமி கண்டக்டர் அல்லாத உபரிபாகங்களில் (BOM) சுமார் 35 சதவிகிதம் இந்தியாவிலிருந்து பெறப்படுகிறது எனவும், அடுத்த இரு ஆண்டுகளில் இதனை 55 சதவிகிதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
மின்சார கார் உற்பத்தியில் கவனம் செலுத்திவரும் ஜியோமி, தனது ‘எஸ்யு7 மேக்ஸ்’ காரினை செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல், 5 வகையான மின்சார தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளது.
673 பிஎஸ் ஆற்றல் கொண்ட இந்த கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 800 கிமீ தொலைவு செல்ல முடியும். 2.78 நொடிகளில் 100 கிமீ வேகம் எட்டும் இந்த கார், 33.3 மீட்டரில் 100 கிமீ வேகத்தில் இருந்து நிற்கும். 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த கார் இந்தியாவில் காட்சிப்படுத்த மட்டுமே வைக்கப்பட்டுள்ளது, விற்பனைக்கு இல்லை என்று ஜியோமி தெரிவித்துள்ளது.
மொபைல் உதிரிபாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது:ஜியோமி
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply