தேர்தல்:பொதுமக்கள் வாக்களிப்பதற்கு சிறப்பு ரயில்…

1652202399 0885 - தேர்தல்:பொதுமக்கள் வாக்களிப்பதற்கு சிறப்பு ரயில்...

* நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே. தாம்பரம் – திருநெல்வேலி இடையே ராஜபாளையம், தென்காசி வழியாக கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06089) ஏப்ரல் 20 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

* மறுமார்க்கத்தில் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06090) ஏப்ரல் 21 அன்று திருநெல்வேலியில் இருந்து மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.  இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க  மக்களவை தேர்தல்- தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *