
மே 19,ஹெலிகாப்டர் விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தைத் தொடர்ந்து ஈரான்,ஜூன் 28 அன்று புதிய தேர்தல்களை நடத்தும் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேட்பாளர்களின் பதிவு மே 30 முதல் ஜூன் 3 வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் முதல் துணைத் தலைவரான முகமது மொக்பர், புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.