Saturday, April 5

சென்னை

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் நிகழும் விபத்துகள்: மக்கள் அவதி

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் நிகழும் விபத்துகள்: மக்கள் அவதி

சென்னை
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படாததால் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.கடந்த மாதம் இப்பகுதியில் வாழ்ந்த இளைஞர் ஒருவரின் தலையில் பால்கனியின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது அதே பகுதியில் மூன்றாவது மாடியின் பால்கனி இடிந்து விழுந்ததில், மோகன் (வயது 35) என்பவர் காயமடைந்தார்.சம்பவத்தை அடுத்து சேதமடைந்த குடியிருப்புகளை ஆய்வு செய்த காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள், சிதிலமடைந்த கட்டிடங்களில் வசித்து வந்த எட்டு குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். அவர்கள் தங்களது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள 52 ஆண்டுகள் பழமையான குடிசை மாற...
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிப்பு

சென்னை
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அண்மையில் 3% உயர்த்தப்பட்டது. மேலும், ரேஷன் கடை பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கிய பிறகு, கடந்த 11 ஆண்டுகளில் இதுவரை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது எக்ஸிகியூட்டிவ் பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் என்ற அளவில் போனஸ் தொகை வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.சிஐடியூ - சென்னை மெட்ரோ ரயில் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அத...
சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

சென்னை
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை 14 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று (அக்.29) முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினமும் இருமார்க்கமாகவும் தலா 45 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளது.சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே மூன்று பாதைகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் இரண்டு பாதையில் புறநகர் ரயில்கள், மற்றொரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் இயங்கின. அதற்காக 4-வது பாதை அமைக்க ரூ.274.20 கோடி மதிப்பில் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது.இந்த பணிகளின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.பணி தாமதத்திற்கான காரணமாக கடற்படை அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறிப்பிடப்பட்டது. அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்...