Monday, April 7

புதுச்சேரி

மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல்:பொதுநல அமைப்புகள் கண்டனம், நடவடிக்கை  வேண்டுகோள்!

மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல்:பொதுநல அமைப்புகள் கண்டனம், நடவடிக்கை  வேண்டுகோள்!

புதுச்சேரி
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மணிகண்டன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் பள்ளி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுத மாற்றுப் பள்ளி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் புலன்விசாரணை தவளக்குப்பம் காவல் நிலையம் சார்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பிப்ரவரி 17, 2025 அன்று, பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோரின் தூண்டுதலால், ஆசிரியர்கள், மாணவர்கள் தவளக்குப்பம் – கடலூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் குற்றவாளி அப்பாவி என்பதோடு, அவர் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, எனவே அவரை விடுவிக்க வேண்டும், பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ப...
மூன்று வாலிபர்கள் கொலை: ரவுடி சத்யாவின் காதலி உட்பட மூவர் கைது

மூன்று வாலிபர்கள் கொலை: ரவுடி சத்யாவின் காதலி உட்பட மூவர் கைது

புதுச்சேரி
புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான ரவுடி சத்யாவின் காதலி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கொலை வழக்கின் பின்னணி கடந்த 14ஆம் தேதி, புதுச்சேரி ரெயின்போ நகர் ஏழாவது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில், மூன்று வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். விசாரணையில், கொல்லப்பட்டவர்கள் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரஸி, தீடிர் நகரைச் சேர்ந்த தேவா, மற்றும் மூலகுளம் பகுதியைச் சேர்ந்த ஆதி என போலீசாருக்கு தெரியவந்தது. கொலை நடந்ததற்குப் பின்னர், சம்பந்தப்பட்ட மூவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த கொலைகள், ரவுடி சத்யாவை அவரது எதிரியான முதலியார்பேட்டை விக்கியுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டதால் நடந்ததாக போலீசார் கண்டறிந...
மூன்று வாலிபர்கள் கொலை – பிரபல ரவுடி உட்பட 10 பேர் கைது

மூன்று வாலிபர்கள் கொலை – பிரபல ரவுடி உட்பட 10 பேர் கைது

புதுச்சேரி
புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு சீரார் மற்றும் பிரபல ரவுடி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், ரவுடி சத்யாவை கொலை செய்ய வாலிபர்கள் திட்டமிட்டிருந்ததை அறிந்த அவர், அவர்களை கத்தி முனையில் அழைத்து சென்று தனது சொந்த இடத்தில் வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.கடந்த 14 ஆம் தேதி காலை, புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்குத் தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில், இரண்டு வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டும், மற்றொரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். தகவல் கிடைத்ததும், பெரியகடை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் உழவர்கரையைச் சேர்ந்த ரவுடி தெஸ்தானின் மகன் ரஸி, தீடிர் நகரை சேர்ந்த தேவா, மற்றும் மூலகுளம் பகுதியைச் சேர்ந்த ஆதி என அடையாளம் காணப்பட்டனர். உடற்கூறு ஆய்விற்காக அவர்களின் உடல்கள் கதிர்...
புதுவை அரசு விளையாட்டு வீரர்களை அலட்சியப்படுத்தும் செயலை கண்டிக்கிறோம்!

புதுவை அரசு விளையாட்டு வீரர்களை அலட்சியப்படுத்தும் செயலை கண்டிக்கிறோம்!

புதுச்சேரி
புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையம் (SDAP) என்பது சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டு சங்கங்களுக்கும் எந்த ஒரு நன்மையும் வழங்காதது வெட்கக்கேடான விஷயம்.இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், முதலமைச்சர் ரங்கசாமியின் தலைமையிலும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் முன்னிலையிலும் SDAP பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான தேதி, நேரம், இடம் ஆகியவை ஆறு முறை அறிவிக்கப்பட்டும், எவ்வித காரணமுமில்லாமல் கூட்டம் இன்று வரை நடத்தப்படவில்லை. இது புதுச்சேரி அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் ஒரு மிகப்பெரிய உதாரணம்.மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கடந்த 16 ஆண்டுகளாக எந்த உதவித் தொகையும், ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை. இது வெறுக்கத்தக்க செ...
புதுகுப்பம் அரசு பள்ளி மதில் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் காயம்…

புதுகுப்பம் அரசு பள்ளி மதில் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் காயம்…

புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தின் மணவெளி தொகுதியில் உள்ள புதுகுப்பம் மீனவ கிராமத்தில் அமைந்த அரசு ஆரம்பப்பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்து, மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தை அறிந்த பாமக மாநில அமைப்பாளர் கோ. கணபதி அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் பேசி அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.அப்போது, அவர் தெரிவித்ததாவது:"புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கட்டிடங்கள் பத்திரமாக இருக்க வேண்டும். ஆசிரியர்களும், பள்ளி ஊழியர்களும் கட்டிடத்தின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பழுதாகிய கட்டிடங்கள் மற்றும் மதில் சுவர்களைப் பற்றிய தகவலை உடனடியாக அரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்து, அவற்றை...
அதிமுக செயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை

அதிமுக செயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை

புதுச்சேரி
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், இந்தியாவிலுள்ள மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு நடைமுறையைத் தொடர்ந்து, மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்கள் மாநில இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், கடந்த 29-01-2025 அன்று உச்சநீதிமன்றம், சிவில் அப்பீல் எண்.9289/2019 மற்றும் WRIT PETITION (C) NO.1183/2020 வழக்குகளின் தீர்ப்பில், மாநில ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை அரசியல் அமைப்பு சட்டப்படி அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக, மாநிலங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அகில இந்திய அளவில்...
இணைய மோசடியில் இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த காவல்துறையினர்…

இணைய மோசடியில் இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த காவல்துறையினர்…

புதுச்சேரி
புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த ராஜேஷ் குமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா வேலை வாய்ப்புக்காக இணைய வழி மோசடியில் சிக்கி 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இழந்தார். அந்த சம்பந்தமான புகாரின் பேரில், இணைய வழி போலீசார் விசாரித்து பெங்களூர் மற்றும் பிஹாரைச் சேர்ந்த நான்கு நபர்களை கைது செய்து, 65 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா முழுவதும் 3000க்கும் மேற்பட்ட நபர்களை கனடா நாட்டிற்கு அனுப்பி மோசடி செய்ததாக கண்டுபிடித்தனர்.அந்த வழியில், ராஜேஷ் குமாருக்கு இழந்த 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மீட்டுக் கொடுக்கப்பட்டது. இதனால், காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துப் புதுச்சேரியில் நேற்று அவர் இணைய வழி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் தலைமை காவலர் மணிமொழி ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.  ...
பரிக்கல் பட்டு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாமின் நிறைவு விழா

பரிக்கல் பட்டு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாமின் நிறைவு விழா

புதுச்சேரி
புதுவை மாநிலம், பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவிகளுக்கான மூன்று மாத சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை இந்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. இதில் ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்று பலனடைந்தனர்.இந்த பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமை தாங்கியுள்ள புதுவை மாநில தற்காப்பு கலை சங்க இணைச் செயலாளர் பாலச்சந்தர், தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் கராத்தே வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பெருமிதம் செய்தார்.கௌரவ விருந்தினர்களாக கார்த்திகேயன் பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீ அரிவாம் பலம் பட்டதாரி ஆசிரியை, ஆண்டனி ராக் சத்யா உடற்கல்வி ஆசிரியர், அரியூர் செல்வம்...
புதிய கணினி ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா…

புதிய கணினி ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா…

புதுச்சேரி
தவளக்குப்பம் இராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் ஆணைக்கிடை கீழ், தேசிய உயர்கல்வி திட்ட நிதியில் (RUSA) ₹66.99 லட்சம் மதிப்பில் 314.29 சதுர அடியில் கட்டப்பட்ட புதிய கணினி ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.இந்த விழாவில் புதுச்சேரி மணவெளித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு. செல்வம் ஆர் மற்றும் புதுச்சேரி அரசு உள்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி ஆய்வகத்தை திறந்து வைத்தனர்.விழாவில் புதுச்சேரி அரசு உயர்கல்வி துறை இயக்குநர் திரு. அமன் ஷர்மா மற்றும் தேசிய உயர்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. K. அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹென்னா மோனிஷா, கல்வி...
பெண் புகைப்படங்களை திருடி மிரட்டிய நபர் கைது…

பெண் புகைப்படங்களை திருடி மிரட்டிய நபர் கைது…

புதுச்சேரி
புதுச்சேரி: இளம் பெண் மாடலிங் செய்துகொண்டிருந்தார், அவருடைய புகைப்படங்களை திருடி ஆபாசமாக மார்பிங் செய்து, அவரது சக நண்பர்களுக்கும் அப்படியாக புகைப்படங்களை அனுப்பி மிரட்டிய நபர் கைது.புதுச்சேரி ஒருங்கிணைந்த தனியார் கல்லூரியில் பட்ட படிப்புடன் பியூடிசியன் மாடலிங் செய்துவந்த பெண், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டதன் மூலம் பல ஆயிரம் பேரால் பின்தொடரப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு, ஒருவர் அந்த புகைப்படங்களை திருடி, கேவலமாக மார்பிங் செய்து ஆபாச வார்த்தைகள் மூலம் மிரட்டியதாக தெரியவந்தது. அவருக்கு மேலும், ஆபாச வீடியோ காலில் தொடர்பு கொள்ள அல்லது புகைப்படங்களை அவரது நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாக அவர் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில், இணையவழி காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. அந்த நபரின் செல்போன் கண்காணிக்கப்பட்டு, அவனின் இன்ஸ்டாகிராம் மற்று...