பள்ளிக்கல்வித்துறை செயலற்ற நிலையில் உள்ளது- எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு !

IMG 20240911 WA0029 - பள்ளிக்கல்வித்துறை செயலற்ற நிலையில் உள்ளது- எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு !


திருச்சி, செம்பட்டு அருகே எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் சந்திப்பு நடந்தது. இந்த கூட்டம் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை முபாரக், தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை, நெல் கொள்முதல் மற்றும் விவசாய நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளை விமர்சித்தார்.

வக்பு திருத்தச் சட்டம்:
வக்பு திருத்தச் சட்டம் வக்பு சொத்துகளை கபளீகரம் செய்து, அதானி மற்றும் அம்பானி போன்றவர்களுக்கு விற்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த திருத்தங்களை கைவிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பரந்தூர் விமான நிலையம்:
பரந்தூர் விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருவதாகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்தமாட்டோம் என்று தமிழக அரசு வாக்குறுதி அளித்திருந்தும், நிலங்களை கையகப்படுத்த முனைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்:
நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் அதிகளவு லஞ்சம் கேட்பதாகவும், இதனால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் லஞ்சம் கொடுத்தும், நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயி தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டார். மேலும், போதிய அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பள்ளிக்கல்வித்துறையின் செயலற்ற நிலை:
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக சீர்கேடு அடைந்துள்ளதாகவும், அதற்கு உதாரணமாக சென்னை அசோக் நகரில் பள்ளியில் நடந்த மகாவிஷ்ணு உரை நிகழ்வை கூறினார். பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கு இல்லாததாக அவர் கூறினார்.

பேரணி அறிவிப்பு:
நவம்பர் 16-ம் தேதி சென்னையில் எஸ்டிபிஐ சார்பில் முஸ்லிம்களுக்கு 7% இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சிறையில் இருக்கும் 26 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்தார்.

இதையும் படிக்க  சாட்டை துரைமுருகன் விடுவிப்பு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *