புனே படகு விபத்து…

Boat - புனே படகு விபத்து...

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள உஜானி அணையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை  ஏற்பட்ட படகு விபத்தில் 6 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர்.அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதுவரை 5 பேரை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்.மேலும், ஒருவரின் உடலை தேடும் பணியை பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *