Thursday, February 13

அருணாச்சல், சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை….


அருணாச்சல், சிக்கிமில் பேரவைகளின் பதவிக்காலம் இன்றுடன்(ஜூன் 2) நிறைவடைவதால், முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுடன், பேரவைத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சௌனா மெயின் உள்பட 10 பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் பவன் குமார் அறிவித்திருந்தார்.இந்த நிலையில், மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையும்போது, தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என்பதால் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


இதையும் படிக்க  'சீர் ஹரன்' நடந்ததாக சுவாதி மாலிவால் புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *