நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி!

AFP 20240319 34LQ6CF v2 HighRes PngFlood 1710893421 - நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி!

பப்புவா நியூ கினியாவில் இன்று (மே24) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.தென் பசிபிக் தீவு நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள எங்கா மாகாணத்தின் காகலம் கிராமத்தில் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 100-க்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூடும்  என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.நிலச்சரிவில் புதைத்துள்ள  உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *