“சந்திரமாரி பள்ளியில் புத்தாக்க கண்காட்சி: மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றார்”

கோவை காளப்பட்டியில் அமைந்துள்ள சந்திரமாரி சர்வதேச பள்ளியில் புத்தாக்க வாரத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் துபாயின் லேப் ஆப் ஃபியூச்சர் இணைந்து, மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் புத்தாக்க செய்முறை பிரம்மாண்ட திட்ட கண்காட்சியை ஒழுங்கு செய்தது. கடந்த ஐந்து நாட்களாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியில், அவர்கள் குழுவாக சேர்ந்து ட்ரோன் தயாரிப்பு, ராக்கெட் ஏவுதல், ரொட்டிக்ஸ், ஏரோ மாடலிங் மற்றும் டெலிஸ்கோப் உருவாக்கம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை கற்கின்றனர்.

இந்த பயிற்சியின் போது, மாணவர்கள் தங்கள் செய்முறை படைப்புகளை நிகழ்த்தி, அவற்றின் செயல்பாட்டை விளக்கி காட்டினர். கண்காட்சியில் செயல்படும் ட்ரோன்கள், ராக்கெட்கள், ஏரோ மாடலிங் மற்றும் நுட்பமான ரோபோடிக்ஸ் வடிவமைப்புகள் போன்ற பல்வேறு படைப்புகள் கண்காட்சிக்கு இடம் பெற்றிருந்தன. பெற்றோர்கள், பிற பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

மாணவர்கள் தங்கள் படைப்புகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விளக்கங்களை அளித்து, எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் வடிவமைத்தது குறித்து விளக்கினார். அதன் பிறகு, மாணவர்கள் உருவாக்கிய ராக்கெட் ஏவுதல் மற்றும் ட்ரோன்களை பறக்கவிட்டு, சக மாணவர்களை வியக்க வைத்தனர். பெற்றோர்கள், இந்த பயிற்சியின் மூலம் தங்கள் குழந்தைகளின் திறன்கள் மற்றும் ஆர்வங்களை கண்டு வியந்து ரசித்தனர்.

பள்ளித்தாளாளர் சுமதி முரளிகுமார், இந்த பயிற்சியில் மாணவர்கள் அறிவியலின் மீதும் தொழில்நுட்பத்தின் மீதும் ஆர்வம் காட்டி, அதை எதிர்காலத்தில் மேலும் வளர்க்கும் வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார்.

பள்ளி மாணவர்கள் கூறியதாவது:
புத்தாக்க திட்டக் கண்காட்சியில் தற்போது அதிகளவில் ஆர்வம் உருவாகியுள்ளது. இந்நிலையில், அவர்கள் இஸ்ரோ, நாசா போன்ற நிறுவனங்களில் வேலை செய்வதற்கும் அறிவியல் தொழில்நுட்பம் பயில்ந்து பல சாதனைகளை படைக்கும் ஆர்வத்தை கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *