கிராம பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்…

பொள்ளாச்சி அருகிலுள்ள ஆச்சிபட்டி கிராம பஞ்சாயத்தை, பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைத்தால், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக, வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரிகளால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலவித சிரமங்கள் உண்டாகும்.

மேலும், 15-வது நிதி குழு நிதி மற்றும் தேசிய கிராமப்புற வளர்ச்சி நிதி கிடைக்காமையால், கிராமத்தின் வளர்ச்சி பின்னடைவை சந்திக்க நேரிடும்.

ஆச்சிபட்டி பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால், விவசாயத் துறையில் நெருக்கடிகள் ஏற்படும். அதன்போது, வீடற்ற ஏழைகளுக்கு மானிய விலையில் வீடு கிடைக்காமல் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என, இந்தச் செயல்முறை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சிகளின் சார்பிலும் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் எஸ்.ந.ரங்கநாதன், பி.ஆறுசாமி, திமுக சார்பில் கே.சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.லோகநாதன், எம்.கணேசன், காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.சிவகுமார், மதிமுக சார்பில் ரவி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *