ஜனவரி மாதம் ஆண்டுதோறும் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தொடர்ச்சியில், திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில், திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான பேரணி நடத்தப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் பேரணியாக சென்றனர்.
பேரணி முடிவினரை, பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, சாலை பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில் நடராஜன், போக்குவரத்து துறை அதிகாரிகள் வெங்கடேசன், அன்பு பூங்கொடி, ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.