பொள்ளாச்சியில் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு சுதந்திரப்போராட்ட வீரரின் நினைவாக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.
பெருநகர பேருந்து நிலையம் முன்பு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, பொதுமக்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் ஆர். வெள்ளை நடராஜ் தலைமை தாங்கி, பேரவை செயலாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார். தொடர்ந்து, பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி முன்னாள் முதல்வர் ரெ. முத்துக்குமரன் மற்றும் தற்போது உள்ள முதல்வர் மாணிக்க செழியன் மாணவ மாணவிகள் இடையே உரையாற்றினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
பட்டாம்பூச்சி இலக்கிய களம் கவிஞர் முருகானந்தம், பேரவை நிர்வாகிகள் ஜீபீர் விக்னேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியில் பேரவை நிர்வாகி விக்கி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி வரலாற்று துறை மாணவ மாணவிகள், பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.