பொள்ளாச்சி,கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகரில் இன்று அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவுக்கான முன்னிடைவிட்டு, திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்துவரப்பட்டு, நேற்று பொள்ளாச்சி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் சிவாச்சார்யர்கள் தலைமையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதன் பின்னர் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு யாஸ்திர ஸ்தாபன அஸ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
இன்றைய நிகழ்ச்சியில், ஸ்ரீ ராஜகணபதி விமான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூல ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பொதுமக்களுக்கு மகா தீபாரணை நிகழ்த்தப்பட்டது.
இந்த விழாவில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், நகர மன்ற உறுப்பினர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.