திமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இன்று திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்த்தாய் வாழ்த்தையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து அவமரியாதை செய்வதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளர் மற்றும் மேயர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநரை கண்டித்தும், “தமிழ்நாட்டை விட்டு வெளியேறு” என கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *