தமிழ்நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உதவி மையம் அமைக்க உயர்கல்வி துறை நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆலோசனையின் அடிப்படையில், உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.அதன் அடிப்படையில், உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல்…
