ஆழியாறு அறிவு திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா

இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை! ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடு வாழ்த்த மனைவி நல வேட்பு நாள் என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம் செய்­தவர் ஆழியாறு அறிவுத் திருக்கோவில் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி.

உல­கிலே தந்­தையர் தினம், அன்­னையர் தினம், ஆசி­ரியர் தினம், குழந்­தைகள் தினம், காத­லர்கள் தினம், நண்­பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊன­முற்றோர் தினம், என தனித்­த­னியே கொண்­டாடி மகிழ்­கின்­றனர். சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்­டு­கி­றார்கள்.

குடும்பத்துக்காக தன்னையே அர்ப்­ப­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்லும் விதமாக ஓவ்­வொரு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி தனது மனைவி அருளன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்த நாளை ‘மனைவி நல வேட்பு விழாவாக’ கொண்டாடப்பட்டு வருகிறது

பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­ட­தில்லை. பெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­வ­டைந்­த­தாக சரித்­திரம் இல்லை எந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­ய­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும் என்பதை உணர்த்தும் வகையில் இன்று நடைபெற்ற விழாவில் கணவன் மனைவிக்கு மலர்கள் வழங்கி அன்பை வெளிப்படுத்தினர் அதே போல் மனைவி கணவருக்கு கனி வழங்கினர்.

பெற்றோரை, பிறந்த வீட்டை ,உறவுகளை பிரிந்து கணவருக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து வாழும் மனைவியை சிறப்பிக்கும் இவ் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு அறிவுத் திருக்கோவில் அறங்காவலர் R. பச்சையப்பன் வரவேற்புரை வழங்கினார் முதுநிலை பேராசிரியர் Dr.K. பெருமாள் வேட்பு நல உரை நிகழ்த்தினார். பெண்ணின் பெருமை குறித்து மரபின் மைந்தன் முத்தைய்யா சிறப்புரை ஆற்றினார் மாண்புமிக்க மனைவி எனும் தலைப்பில் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா.MP உரையாற்றினார் இணை நிர்வாக அறங்காவலர் M.சின்னச்சாமி நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *