Friday, April 25

ஆஸ்கர் விருதுகள் 2025 : இந்தியாவின் லாபட்டா லேடீஸ் திரைப்படம் பட்டியலில் இருந்து நீக்கம்…

2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவு பட்டியலில் இருந்து, இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பங்கேற்பாக இருந்த லாபட்டா லேடீஸ் திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுகள் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களை கவுரப்படுத்த ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக கிரண் ராவ் இயக்கிய லாபட்டா லேடீஸ் திரைப்படம் தேர்வாகி அனுப்பப்பட்டது.

கடந்த மார்ச்சில் வெளியான இப்படம், ஒரே ரயிலில் பயணிக்கும் 2 மணமகள்கள் தவறுதலாக வெவ்வேறு மணமகன் இடங்களுக்கு சென்றுவிடுவதால் ஏற்படும் குழப்பங்களையும் அதன்பின் நகரும் நிகழ்வுகளையும் படமாக்கியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு மற்றொரு திரைப்படம் தேர்வு இந்நிலையில், சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் இருந்து லாபட்டா லேடீஸ் நீக்கப்பட்டு, சந்தோஷ் என்ற மற்றொரு இந்தி திரைப்படம் இடம்பிடித்துள்ளது. இத்திரைப்படம் இங்கிலாந்தில் எடுக்கப்பட்டு, ஆஸ்கர் பரிசு பெறுவதற்கான போட்டியில் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பங்கேற்பாக மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படப்பிடிப்பு தொடக்கம்...

இந்த மாற்றத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்படவில்லை. லாபட்டா லேடீஸ் படத்தின் ரசிகர்கள் இது குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *