Tuesday, April 22

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்…

நிலத்தடி நீர் செறிவூட்டும் முன்னோடி திட்டமாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல தலைமுறைகளாக எதிர்பார்க்கப்பட்ட கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் தொடக்க விழா இன்று ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்று, அதிகாரப்பூர்வமாக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மூன்று தலைமுறைகளின் கனவாக இருந்து வந்த இந்த திட்டத்தின் தொடக்கத்தால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிக்க  ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிட கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *