புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த 16ம் தேதி முதல் ஏ.எப்.டி. திடலை தற்காலிக பஸ்டாண்டாக மாற்றி, அனைத்து பஸ்களும் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஏ.எப்.டி. திடலுக்கு அருகில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த இடத்திற்கு புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த பலரும் வார நாட்கள் மற்றும் வேலை நாட்களில் வந்து செல்கின்றனர். இப்பகுதி முழுவதும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக இருந்தது. இந்நிலையில், பேருந்து நிலையம் ஏ.எப்.டி. திடலுக்கு மாற்றப்பட்டதால், கடலூர சாலையில் கட்டண பார்க்கிங் முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தோணியார் கோவிலில் இருந்து ரயில்வே கேட் வரை ஒரு பக்கமாக இருசக்கர வாகனங்கள் நிறுத்த புதிய பார்க்கிங் கட்டணத்தை புதுச்சேரி நகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையில், புதுச்சேரி நகராட்சி கடலூர சாலையில் கட்டண பார்க்கிங் டெண்டரை வெளியிட்டுள்ளது. பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பொழுது 10 பணியாளர்கள் கடலூர் சாலையில் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி கடலூர் சாலையில் இனி பார்க்கும் கட்டணம் வசூல்
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply