Friday, January 24

இனி தீவிர அரசியலில் குஷ்பு..

மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ள குஷ்பு, சமூக வலைதளங்களில் இதனைப்பற்றி பதிவிட்டுள்ளார். “மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி சில கட்டுப்பாடுகளுடன் கூடியது. அந்தப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்துள்ளதால், இப்போது நான் சுதந்திரமாக செயல்பட முடியும். இதனைத் தொடர்ந்து, மீண்டும் முழு உழைப்புடன் அரசியலுக்கு திரும்ப உள்ளேன்,” என்று அவர் கூறியுள்ளார். மேலும், “பிரதமரின் நீண்டநிலைத் திட்டங்களை முன்னெடுத்து செல்லும் எனது முயற்சியில், வதந்திகள் பரப்புபவர்கள் இனி இருக்கமாட்டார்கள்,” எனத் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை இது குறித்து விளக்கமாகப் பேசவுள்ளேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க  திருச்சி கேந்திரிய வித்யாலயா மகளிர் ஹாக்கி அணி தேசிய அளவில் தங்கம் வென்று திரும்பியதற்கு உற்சாக வரவேற்ப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *