![திருப்பூர் பவர் டேபிள் நிறுவனங்கள் வேலைநிறுத்தம் திருப்பூர் பவர் டேபிள் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்](https://thenewsoutlook.com/wp-content/uploads/2024/08/image_editor_output_image-542802179-1724312056915.jpg)
திருப்பூரில் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் 7% கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, 19-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதுவரை, 7% கூலி உயர்வை வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்களை ஏற்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டு, வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால், தையல் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.