Tuesday, January 14

திருவண்ணாமலை மகாதீப மலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு – எச்சரிக்கை

மகாதீப மலை பகுதியில் மண் சரிவால் புதைந்து பலியான மேலும் 2 பேரின் உடல்களை மீட்கும் பணி தொடர்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், சென்னை ஐ.ஐ.டியில் ஓய்வு பெற்ற வல்லுனர்கள் மோகன், நாராயண ராவ், பூமிநாதன் ஆகியோர் திருவண்ணாமலைக்கு வந்து மீட்பு பணிக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

வல்லுனர்கள் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து மழை பெய்தால் மண் சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மலையின் அருகே வீடுகள் கட்ட முனைவோர், முன்னதாக தகுந்த என்ஜினீயர்களின் ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாப்பான திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மண் சரிவு தொடர்பான முழுமையான ஆய்வறிக்கையை மாநில அரசுக்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும், அதில் உள்ள விவரங்களை அரசு விரைவில் வெளியிடும் என வல்லுனர்கள் கூறினர்.

மகாதீப மலையில் மண் சரிவு காரணமாக நிலவும் நிலைமை திருவண்ணாமலை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியதுடன், மீட்பு பணிகள் தொடரும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிக்க  ஒரே நாளில் 4 அடி உயர்ந்த சிறுவாணி அணை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *