Friday, November 14

இந்து சமய அறநிலையத்துறையை வெளியேற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்…..

தமிழகத்தில் உள்ள இந்து கோயி்ல்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி திருவானைக்காவல் அருகே இன்று இந்து முன்னணி அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை, ஸ்ரீரங்கம் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
அப்போது இந்து முன்னணி அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளும்,  கடும் வாக்குவாதமும் ஏற்பட்டதால் பரபரப்பானது.

இதையும் படிக்க  வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் கேள்வி .....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *