Tuesday, January 21

இந்து சமய அறநிலையத்துறையை வெளியேற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்…..

தமிழகத்தில் உள்ள இந்து கோயி்ல்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி திருவானைக்காவல் அருகே இன்று இந்து முன்னணி அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை, ஸ்ரீரங்கம் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
அப்போது இந்து முன்னணி அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளும்,  கடும் வாக்குவாதமும் ஏற்பட்டதால் பரபரப்பானது.

இதையும் படிக்க  சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட தை எதிர்த்த ஆட்கொணர்வு மனு - 26 ஆம் தேதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *