Tuesday, January 14

கோவை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் !

கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், மாணவ மாணவிகள் இன்று ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால், வயநாடு பகுதியில் பெரும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததால், மக்கள் துயரத்தில் மூழ்கினர். அவர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் !

இதையடுத்து, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் சார்பாக, வயநாடு நிவாரண நிதியாக 1,25,000 ரூபாய் கல்லூரி முதல்வரிடம் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க  திருச்சி: TET தேர்ச்சியாளர்கள் 400 பேர் ஆர்ப்பாட்டம் - திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *