
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். குமரேசன் (35), புவனேஸ்வரி(28) தம்பதியினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகியுள்ளது. இரண்டு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை என்ற ஏக்கமும், கடன் தொல்லை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மன உளைச்சலில் இருந்த இந்த தம்பதியினர், அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியை பிடித்துள்ளனர். இதில் கணவன் மனைவி ஆகிய இருவர் உடல் மீதும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.