Tuesday, January 21

சூலூரில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கி வைத்த ஆளுநர்…

இந்திய விமானப்படை சார்பில், தாரங் சக்தி 2024 என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி, இந்தியாவில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியின் முதல் கட்டம், கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி, சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதில், இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, மற்றும் ஸ்பெயின் ஆகிய 5 நாடுகளிலிருந்து 130-க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, இன்று ஒரு ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். கவர்னர், கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ராக்கெட்டுகள், ஏவுகணைகள், போர் விமானங்கள், சிறிய ரக போர் விமானங்கள், மற்றும் ஆளில்லா போர் விமானங்களை பார்வையிட்டார்.

இன்று தொடங்கிய இந்த கண்காட்சி, ஆகஸ்ட் 15 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் 2 நாட்கள், ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கண்காட்சியை பார்வையிட உள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15 அன்று, பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

இதையும் படிக்க  மேகமலை அருவிக்கு செல்ல தடை

இந்த கண்காட்சியில், மொத்தம் 62 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறையின் தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் ஹிந்துஸ்தான், பெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முக்கியமான தனியார் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளன.

அதிகாரிகள் கூறுகையில், சர்வதேச ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் உலகளவில் இந்தியாவின் முன்னேறி வரும் பாதுகாப்புத் திறன்களை வெளிப்படுத்துவது, இந்த பன்னாட்டு கூட்டுப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். இதில், பாதுகாப்பு படையில் பயன்படுத்தப்படும் போர் விமானங்கள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள், மற்றும் பல்வேறு தளவாட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *