Sunday, April 27

தொழில் போட்டியால் ஒட்டுநர் கொலை!

காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் தொழில் போட்டியால் இரு ஒட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, சென்னையைச் சேர்ந்த சாமுவேல் (41) கொல்லப்பட்டார். சென்னையில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சாமுவேலும், நாங்குநேரியைச் சேர்ந்த வெள்ளப்பாண்டியும் (49) கடந்த காலங்களில் வெளியுறவு சுற்றுலா பயணிகளை டூஸ்ட் காரில் அழைத்து சென்றனர். அவர்கள் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானுக்கு வந்த போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தனியார் விடுதியில் இறக்கிவிட்டு காரில் தங்கியிருந்த போது, தொழிலில் ஏற்பட்ட சரிவுடன் தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் வெள்ளப்பாண்டி தனது அருகிலிருந்த கத்தியால் சாமுவேலை குத்தியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே சாமுவேல் உயிரிழந்தார். செட்டிநாடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமுவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வெள்ளப்பாண்டியைக் கைது செய்து கொலை வழக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
இதையும் படிக்க  கஞ்சா குடிப்பதற்காக மின் ஒயர்களை திருடிய இளைஞர் கைது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *