கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா என்.ஜி.பி. கலையரங்கில் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர், மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சா. சரவணன், கல்லூரியின் நடப்பு கல்வியாண்டின் ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கி, மாணவர்களுக்கு உறுதிமொழி எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக பேராசிரியர் எஸ். வின்சென்ட் கலந்து கொண்டு, பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் இளங்கலை 193, முதுகலை 390 மற்றும் முனைவர் பட்டம் 12, மொத்தம் 2305 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
நிகழ்ச்சியில் கோவை மருத்துவ மையத்தின் நிர்வாக அறங்காவலர் அருண் என். பழனிசாமி, என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி, என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ஓ.டி. புவனேஸ்வரன், இணை செயல் அலுவலர் மா.நடேசன், என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் இயக்குனர் பே.ரா.முத்துசாமி, கல்லூரியின் கல்வி சார்ந்த இயக்குனர் ராமமூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.