சென்னை மாநகராட்சி பருவ மழையை எதிர்கொள்ள 36 படகுகள் வாங்கியது…

image editor output image714462623 1727935746388 - சென்னை மாநகராட்சி பருவ மழையை எதிர்கொள்ள 36 படகுகள் வாங்கியது...

பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி 36 சிறிய படகுகளை வாங்கியுள்ளது. இதனுடன், மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாடகைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடி பகுதிக்கு 2 படகுகளும், மாதவரம் பகுதிக்கு 1 படகும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மழை காலத்தின்போது பெருவெள்ளம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக மீட்க இந்த படகுகள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/chennaicorp/status/1841511989530804641?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1841511989530804641%7Ctwgr%5E2d4ea5dbcfa276e0079708eddc495bda422a6f25%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fwww.dinamani.com%2Ftamilnadu%2F2024%2FOct%2F03

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில், பருவ மழையை முன்னிட்டு மழை நீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  ஆனைமலையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *