108 ஆம்புலன்ஸில் பிரசவம்:தாயும் சேயும் காப்பாற்றிய தங்கவேல், மணிகண்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்…

IMG 20240923 WA0038 - 108 ஆம்புலன்ஸில் பிரசவம்:தாயும் சேயும் காப்பாற்றிய தங்கவேல், மணிகண்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்...

பொள்ளாச்சி அருகே ஜலத்தூர் பகுதியைச் சேர்ந்த காயத்திரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக ஓட்டுநர் தங்கவேல் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டன் விரைந்து காயத்திரி வீட்டிற்கு சென்று, அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பிரசவ வலி அதிகரித்ததால், மணிகண்டன் ஆம்புலன்ஸில் இருந்தபடியே அவசர சிகிச்சை அளித்தார்.

img 20240923 wa00408228548086208573745 - 108 ஆம்புலன்ஸில் பிரசவம்:தாயும் சேயும் காப்பாற்றிய தங்கவேல், மணிகண்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்...
img 20240923 wa00414174220321550584196 - 108 ஆம்புலன்ஸில் பிரசவம்:தாயும் சேயும் காப்பாற்றிய தங்கவேல், மணிகண்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்...

சிறிது நேரத்தில் காயத்திரி ஆம்புலன்ஸில் அழகான ஆண் குழந்தையை பிறப்பித்தார். பிறகு, தாயும் குழந்தையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸில் சாமர்த்தியமாக செயல்பட்டு, பிரசவம் பார்த்து தாயும் சேயும் பாதுகாப்பாக இருந்ததை உறுதிப்படுத்திய தங்கவேல் மற்றும் மணிகண்டன் மீது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

img 20240923 wa00394919753209318791057 - 108 ஆம்புலன்ஸில் பிரசவம்:தாயும் சேயும் காப்பாற்றிய தங்கவேல், மணிகண்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்...
img 20240923 wa00426601019922883888428 - 108 ஆம்புலன்ஸில் பிரசவம்:தாயும் சேயும் காப்பாற்றிய தங்கவேல், மணிகண்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்...
இதையும் படிக்க  கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *