Tuesday, January 14

ஆட்டோவில் தவறவிட்ட உயர் ரக செல்போனை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுனர் – புதுச்சேரியில் நேபாளப் பெண்ணின் சம்பவம்!

நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தபோது, ஆட்டோவில் உயர்தர ஆப்பிள் செல்போனை தவறவிட்டார். நகரின் சுற்றுலா இடங்களைப் பார்வையிடுவதற்காக ஆட்டோவில் பயணம் செய்தபோது, அச்செல்போனை மறந்து விட்டார். இது கவனத்தில் பட்ட ஆட்டோ ஓட்டுனர், அவரை இறக்கிவிட்ட இடத்துக்குச் சென்று, அவரது கணவர் தொடர்பு எண்ணை பெற்றார். பிறகு, அவருக்கு அழைத்து, செல்போன் கிடைத்துள்ளதாக தகவல் கூறினார். அந்த நேரத்தில் நேபாள பெண் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிப் பேருந்தில் புறப்பட்டிருந்ததால், ஆட்டோ ஓட்டுனர் நேரடியாக சென்று செல்போனை ஒப்படைத்தார். இந்த நிகழ்வு பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

இதையும் படிக்க  அகில இந்திய மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பதில் புதுச்சேரி முன்னிலை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *