Friday, June 27

மோட்டார் சைக்கிள் திருடிய கும்பல் கைது: 6 வாகனங்கள் மீட்பு

புதுச்சேரி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் சமீப காலமாக இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதில் அதிகரிப்பு காணப்பட்டது. இதுகுறித்து புகார்கள் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணனுக்கு கிடைத்ததையடுத்து, போலீசாருக்கு தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில், எஸ்.பி. வம்சிதா ரெட்டியின் மேற்பார்வையில், நெட்டப்பாக்கம் வட்டார இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன் மற்றும் எஸ்.ஐ. வீரபத்திரன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது திருவாண்டார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே வேகமாக பைக்கில் வந்த ஒருவரை மடக்கி விசாரித்த போது, அவரது பதில்களில் முரண்பாடு இருந்தது. ஆவணங்களை கேட்டபோது, வாகனத்தின் உரிமை ஆவணங்கள் அவரிடம் இல்லை. மேலும் விசாரணையில், அவர் ஓட்டிவந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது உறுதியானது.

அவரை காவல் நிலையம் அழைத்து விசாரித்ததில், கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த சலீம் (38) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில், திருபுவனத்தில் 3 பைக்குகள், வளவனூரில் 2 பைக்குகள் மற்றும் முதலியார் பேட்டையில் 1 பைக்கை திருடி, கோட்டகுப்பத்தைச் சேர்ந்த கமாலுதீன் (20) மற்றும் ஷேக் மோதின் (35) ஆகியோரிடம் விற்பனை செய்ததும் வெளிச்சமாயினர்.

போலீசார் திருட்டு மோட்டார் சைக்கிள்களுடன் மேலும் 5 வாகனங்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மூவரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

 
இதையும் படிக்க  ஆட்டோவில் தவறவிட்ட உயர் ரக செல்போனை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுனர் – புதுச்சேரியில் நேபாளப் பெண்ணின் சம்பவம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *