Sunday, April 20

புனேவில் கல்லூரி விடுதியில் தீ விபத்து!

மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள கல்லூரியின் ஆண்கள் விடுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. கல்லூரி ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், தீயணைப்பு துறை மற்றும் மின்சார துறையினரை தொடர்பு கொண்டனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்ததாக  தெரிவித்தார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்புப் படையினர் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்து மேலும் சேதம் ஏற்படாமல் தடுத்தனர். தீவிபத்து ஏற்பட்ட கல்லூரி தனியார் கல்விச் சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  மீண்டும் மோடி அரசு அமையும்;யோகி ஆதித்யநாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *