Sunday, April 27

கல்வி உதவித்தொகை விழா…

கோவை:காரமடை பகுதியில், ஸ்ரீ அருந்ததி பொதுநல அறக்கட்டளையின் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அறக்கட்டளையின் தலைவர் துரைசாமியின் தலைமையில் சிறப்பு விருந்தினராக ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

கல்வி உதவித்தொகை விழா...

விழாவில் அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் நடராஜன் வரவேற்புரையாற்றினார். பின்னர் பேசுகையில், அதியமான், “சமூக நீதியின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

அவரது பேச்சில், அருந்ததியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படாததையும், அரசின் முடிவுகள் வேறு சமூகத்தினருக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடினார். மேலும், பட்டியலின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றார்.

கல்வி உதவித்தொகை விழா...

இது தவிர, அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்த திருமாவளவனை, சமூக நீதிக்கு எதிரானவர் எனவும் அதியமான் குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்வில், திராவிடர் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், பேரூர் அருந்ததியர் பொதுநல அறக்கட்டளையின் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  CUET 2024 நுழைவுத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு
கல்வி உதவித்தொகை விழா...
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *