Wednesday, October 29

குரூப்-1: சான்றிதழ் பதிவேற்றம்…

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வில் தேர்வர்களால் இன்னும் பதிவேற்றப்படாத சான்றிதழ்களை நவம்பர் 2-ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குரூப்-1 தேர்வில் தேர்வர்கள் சிலர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதது, அல்லது சிலவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யாமலே விட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது,” என்று கூறியுள்ளார்.

தேர்வர்கள், தங்களது சான்றிதழ்களை நவம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து, தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலவரையறைக்குள் பதிவேற்றம் செய்ய தவறினால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
இதையும் படிக்க  எமிஸ் செயலி பணிகளுக்காக மேலும் 1,800 பேர் நியமனம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *