Wednesday, February 12

நவம்பர் மாதத்தில் 2 நாட்கள் UPI சேவை தற்காலிகமாக நிறுத்தம்

இந்தியாவில் யுபிஐ சேவை மூலம் தினசரி லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு ஹெச்டிஎப்சி வங்கி தனது யுபிஐ சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது.

வங்கியின் கணினி பராமரிப்பு பணிகளுக்காக, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 23 ஆகிய தினங்களில் யுபிஐ சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5ஆம் தேதி இரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மற்றும் நவம்பர் 23ஆம் தேதி இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வங்கியின் யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறாது. இதனால், இந்த நேரத்தில் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்கப்பட்ட எந்த யுபிஐ சேவையையும் பயன்படுத்த முடியாது.

இதையும் படிக்க  Housing Market Sees Decline in Prices Amid Economic Uncertainty

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *