
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண் துறை, வனத்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்
திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல இடங்களில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் தண்ணீரை முறைகேடாக திருடுவதாகவும் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்
மேலும் அங்கலக்குறிச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தென்னை நார் தொழிற்சாலைகளில் ஆழியார் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு தென்னை நாரை சுத்தம் செய்து வருகின்றனர் இதனால் நிலத்தடி நீரின் தண்ணீர் தன்மை மாறி கிணறுகள் குளங்கள் மாசடைந்து வருகிறது மாசடைந்த தண்ணீரை அருந்துவதால் கால்நடைகள் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு விவசாய பணிகளுக்கு அந்த தண்ணீரையே பயன்படுத்தும் நிலை உள்ளதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை புகார் கொடுத்து வருகிறோம்.
ஆனால் அதிகாரிகள் தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் கைகோர்த்து செயல்படுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறுகின்றனர் மனுக்கள் கொடுத்து கொடுத்து ஓய்ந்து போனது தான் மிச்சம் மனு கொடுப்பதையே நிறுத்திவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது